Friday, 17th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த கணபதிஅக்ரஹாரம் அருகில் பிரசித்தி பெற்று வரும் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ப்ரம்மோத்ஸவ பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனத்தில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ மஹா கணபதியின் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தருக்கு காட்சியளித்தார் அதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு சிவவாத்தியங்கள் முழங்க திருத்தேரில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை புரிந்த பக்தர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நாளை சிறப்பு அபிஷேகங்களும் பின்னர் காவிரியாற்றில் மதியம் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது இவ்விழா அப்பகுதியில் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.